சனி, 18 மே, 2019

பெண்களே...! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..?

www.facebook.com/KundaliniDhiyanaPractice


உடலுறவு என்பது ஆணும் - பெண்ணும் ஒன்று சேருவதே என்று பல காலங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்பதே நிதர்சனம். ஆணும் பெண்ணும் மட்டும் ஒன்று சேருவது உடலுறவு கிடையாது. ஒரு ஆணும் - ஆணும் அல்லது ஒரு பெண்ணும் - பெண்ணும் ஒன்று சேருவதுகூட உடலுறவு கொள்வதுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். "காதல்" மிக உன்னதமான ஒன்று. நமக்கு யார்மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறோமோ அவர்களிடமே உடலுறவு கொள்வது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.

இதில் எந்த பாலின வேறுபாடும் இல்லை என்பதே உண்மை. இதில் ஒரு புதியவகை உள்ளது. நம் மீதே நாம் உடலுறவு வைப்பது. இதனை சரியாக சொல்ல வேண்டுமென்றால் "சுய இன்பம்" என்று கூறலாம். ஆண் - பெண் என இருவரும் சுய இன்பம் பெறுவது இயல்பான ஒன்றே. ஆனால் அடிக்கடி சுய இன்பம் கொள்வதால் பல தீமைகள் இதில் ஏற்படுகிறது என்றே ஆராய்ச்சிகள் சொல்கிறது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லப்போனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய பக்க விளைவுகள் வரக்கூடும். இதனை பற்றி இனி அறிந்து கொள்வோம்.



#புள்ளி விவரம்சுய இன்பத்தை பற்றி புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒரு அதிர்ச்சிகரமான விடையே கிடைத்துள்ளது. வாழ்நாளில் 95% ஆண்களும், 92% பெண்களும் சுய இன்பம் கொள்வதாக அந்த புள்ளி விவரம் விவரிக்கிறது. இது சில வகையாக பிரித்தும் சொல்லப்படுகிறது. சிலருக்கு சிறுவயதிலேயே சுய இன்பம் மீது ஈர்ப்பு வந்திருக்கலாம், சிலருக்கு பதின் பருவத்தில் இது வரலாம்,அல்லது சிலருக்கு வயோதிக காலத்தில் கூட வரலாம். எப்போதிருந்தாலும் இது சில தீமைகளை கொடுத்துவிட்டுதான் செல்கிறது.

#அடிமை ஆகுதல்பொதுவாக சுய இன்பம் எப்போதாவது செய்தால், அது உடலுக்கு நன்மை தரும். ஆனால், ஒரு முறை செய்துவிட்டு இதன்மீது மோகம் கொண்டால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். மது பழக்கம், போதை பழக்கம் எப்படியோ அதே போன்றுதான் இந்த சுய இன்பமும். இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகினால் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அத்துடன் மன குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.

#பாலியல் வாழ்க்கைசுய இன்பம் கொள்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் அதிகம் நாட்டம் கொள்ளமுடியாமல் போய்விடும். இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும். சுய இன்பம் கொள்வதால் ஆர்கசம் விரைவில் அடைந்து தனது துணையுடன் உடலுறவு கொள்ளாமல் போகும் நிலை ஏற்பட கூடும். இது உங்கள் இருவரின் வாழ்க்கையின் இன்பத்தையே கெடுத்துவிடும்.

#நோய் தொற்றுகள்உடலில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டால் அது நோய் தொற்றாக இருக்கலாம். குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த மாதிரி தொற்றுகள் பிறப்புறுப்புகளில் வந்தால் அவ்வளவுதான். இது பல அபாயகரமான பிரச்சினைகளை உருவாக்க வல்லது. சுய இன்பம் அடிக்கடி கொள்வதால் பெண்களின் பிறப்புறுப்புகளில் ஈரப்பதம் இன்றி, வறண்டு போகும். அத்தோடு சேர்த்து நோய் தொற்றுகளும் ஒட்டி கொண்டு சீழ் போன்றவை வரும்.

#உளவியல் தொல்லைபலருக்கு சுய இன்பம் என்றாலே ஒருவித பயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் தனிமை நேரத்தில் அவர்கள் சுய இன்பம் கொண்டு பிறகு அதனையே நினைத்து வருந்துவார்கள். ஏதோ மிக பெரிய குற்றம் செய்துவிட்டது போல அதையே திரும்ப திரும்ப நினைவூட்டுவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். இது உளவியல் ரீதியாக மிக பெரிய தாக்கத்தை அவர்களுக்குள் வரவழைக்கும்.

#ஆரோக்கியமற்ற வாழ்வுசுய இன்பத்தால் பல மனம் சார்ந்த பிரச்சினைகள் வருவதால் இது உடல் ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதிக்கும். இதனால் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல், தேவையற்ற மனக்கசப்புகளுடன் வாழ இது வழி வகுக்கும். எனவே "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.

#உறுப்புகள் பாதிப்புஅடிக்கடி பெண்கள் சுய இன்பம் கொள்வதால் அவர்களில் பாலியல் உறுப்புகள் சேதமடைய கூடும். உடலுறவு வைத்து கொள்ள பெரிதும் தடையாக இருக்கும். அத்துடன்அந்த உறுப்புகள் வலுவிழந்து பாலியல் வாழ்க்கையில் மிக பெரிய விரிவை கொடுக்கும். எனவே சுய இன்பம் அடிக்கடி செய்வதை கட்டாயம் தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்தையம், மன ஆரோக்கியத்தையும், எல்லாவற்றிற்கும் மேல் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

பேய்களை விரட்டுவது எப்படி


ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.


திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை!துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப்போகச் செய்யலாம்.


துர்மரணமடைந்ததுவாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.


     சில மூலிகைகள்   நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.


ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும். மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.


ஞாயிறு, 16 ஜூலை, 2017

செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கட்டு மந்திரம்...

                                     
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள்.
யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை. ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள்,

                                                                         


“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களைபிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்குஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"

                                                             

திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள், பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காதுஎன்கிறார்

                                                                        அகத்தியர்.

                                                               
இத்துடன்"
பாவி தானாக்கால் யேது மேன்மை"என்றும் சொல்கிறார்.

 பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

இல்லையேல் பலிக்காது.

வியாழன், 11 மே, 2017

பேய் இருப்பதை அறிய

பேய் இருப்பதை அறிய


ஒரு டம்ளர் நீரைக் கொண்டு வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறிய ஓர் எளிய வழி உள்ளது. இங்கு வீட்டில் கெட்ட சக்தி அதிகம் இருப்பதை ஒரு டம்ளர் நீரைக் கொண்டு அறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.


வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள்

 அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலைசெய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன.இங்கு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறியும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக் கொண்டு உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆற்றல்கள்/

சக்திகள்நாம் எங்கு இருந்தாலும், நம்மைச் சுற்றி அங்கு சில ஆற்றல்கள் இருக்கும். வீடு என்பது ஒற்றுமைக்கான இடம். இங்கு அனைத்துவிதமான ஆற்றல்களும் சந்திக்கும். நமது உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் குறிப்பிட்ட ஆற்றல்களை உமிழும். அதே சமயம் குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும்.


உறவுகள்குடும்ப உறுப்பினர்கள்,

பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டால், அது வாழ்க்கையையே பெரிதாக பாதிக்கும்.


விளைவுகள்வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள்

அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது மற்றும் வீட்டில் நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.


கெட்ட சக்தியை அறிய தேவையான பொருட்கள்கண்ணாடி டம்ளர்கல் உப்பு

செய்யும் முறை:

கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும். முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது.


24 மணிநேரத்திற்கு பின்...

24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம். ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.


செவ்வாய், 9 மே, 2017

பெய் விரட்டும் மந்திரம்

திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது


"அகத்தியர்"

"கட்டடா பேயினது முறையைக்கேளுகாணுகிற
குணங்காணும் கருத்தில் சொல்வேன்இஷ்டமுடன்
 பெண்களையாண் ரூபமாக்கும்மினிதான ஆணானால்
 மோகினியைக் காட்டும்நட்டிரவில் சாய்பிதற்றும்
கருவழிக்கும்நளிர்சுரங்கள் பெரும்பாடு
நடுக்கும்பித்தம்முட்டெனவே பெண்புருஷன்
கூடிவாழ்வாள்.
முறையையுட னதுபோகு முறையைக்கேளே."-


"கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்கிளர்பஞ்சா
க்ஷரத்தினது கிருபைநோக்கிஆளடா கோழிபன்றி
யாடுகாவுஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடுதாளடா காரீயம்
செம்புதங்கம்தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்டபாழடா
 அலகையென்ற பேய்களெல்லாம்பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."-

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.


காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன்“அ, இ, அரி, ஓம்”என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டைபாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.

பெண்களே...! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..?

www.facebook.com/KundaliniDhiyanaPractice உடலுறவு என்பது ஆணும் - பெண்ணும் ஒன்று சேருவதே என்று பல காலங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் ...